வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில், வாகனங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளி ஓட்டுநர்கள் இயந்திரம் இயக்கிய நிலையிலேயே வாகனத்தை விட்டுச் செல்வதாகவும், இதனை பயன்படுத்தி குற்றவாளிகள் வாகனங்களை திருடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இரவு நேரங்களில் அல்லது ஆள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
வாகனம் திருடப்பட்டால் உடனடியாக 119 அல்லது 118 காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ, அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Latest News
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்!
Local
23 August 2026
இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி - ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு!
Local
23 August 2026
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!
Local
23 August 2026
"இவர்தான் மருத்துவர்!" - மணக்கோலத்தில் கேரள மணமகளின் மனிதம்!
Local
23 August 2026
ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்
Local
23 August 2026
நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை - முதலிடத்தில் பொலன்னறுவை!
Local
23 August 2026
தென்னாப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு!
Local
23 August 2026
மனிதர்களை மிஞ்சிய தொழில்நுட்பம்: உசைன் போல்டின் 100மீ ஓட்ட சாதனையை நொறுக்கிய சீன ரோபோ!
Local
23 August 2026
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
Local
23 August 2026
உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!
Local
23 August 2026