விமானி போல நடித்து வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தால் கைது செய்யப்பட்டு, புதுக்கடை (Aluthkade) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஆவார்.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் இந்த விசாரணையைத் தொடங்கியது.
சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.
தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் கூறி அவரிடம் பணத்தைப் பறித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர் தனது பேருந்து ஒன்றை விற்று 60 லட்சம் ரூபாய் அந்த பெண்ணிடம் வழங்கியுள்ளார்.
அந்தப் பணத்தைப் பெறுவதற்காகச் சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடையில் வந்திருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்ததால், அவர் காவல்துறையிடம் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து, குருணாகல் பகுதியில் வைத்து சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அந்த பெண் மோசடி செய்துள்ளார்.
மேலும், இதற்கு முன்பும் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி, உட்பட 15 காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Latest News
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கொழும்பை வந்தடைந்தார்
Local
24 August 2026
மரத்திலிருந்து கீழே வீழ்ந்த ஒருவர் பலி : ஹட்டன் – நோர்வூட்டில் சோகம்
Local
24 August 2026
மகனின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் மன்றாடும் சுரேஷ் சலேவின் தாய்
Local
24 August 2026
விதிமீறலில் ஈடுபட்ட இந்திய வீரர் ஜெயஸ்வால், இலங்கை பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோவிற்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி!
Local
24 August 2026
விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்!
Local
24 August 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026
மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம்
Local
24 August 2026
இலங்கையில் மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
24 August 2026
புதிய அவதாரம் எடுக்கும் த்ரிஷா
Local
24 August 2026