General24 August 2026

சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான போராட்டத்துக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கண்டனம்!

கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைமையகத்துக்கு முன்பாக, அந்த சங்கத்தின் தலைவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி சிலர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை மக்களுக்கான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், அதனை அருவருக்கத்தக்க செயல் என்றும் வர்ணித்துள்ளது.

இது தொடர்பாக மக்களுக்கான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் “இந்தத் தாழ்ந்த மற்றும் நாகரிகமற்ற செயலுக்கும், தமது ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கோ அல்லது எந்தவொரு தரப்பிற்கோ எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் திசைகாட்டி அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, அரசாங்கத்தின் இவ்வாறான ஏமாற்று மற்றும் சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்கு மக்கள் பலியாக வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes