துபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு துபாய் காவல்துறையினரால கைது செய்யப்பட்ட அவர், இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை காவல்துறையின் விசேட குழுவினரால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக பஸ் லலித் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று துபாய் சென்றிருந்தது.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பஸ் லலித்திடம், அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Latest News
அம்பலாங்கொட காவல்துறையினரால் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
Local
26 August 2026
இன்று பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Local
26 August 2026
திருமாவளவனின் அறிவிப்பு: கண்டுகொள்ளாத விஜய் -குமுறும் தொண்டர்கள்
Local
26 August 2026
விஜய் பிரதமர் வேட்பாளர் விவகாரம்: காங்கிரஸ் - தமிழக வெற்றிக்கழகம் இடையில் விரிசல்?
Local
26 August 2026
அருகில் வைத்து சுடப்பட்ட பரிதாபம் : கர்நாடகாவில் 3 தமிழர்கள் மரணமான வழக்கில் வெளியான திடுக்கிடும் பிரேதப் பரிசோதனை அறிக்கை!
Local
26 August 2026
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகள் கேட்டு தோனி நிபந்தனை? - தொடரும் பேச்சுவார்த்தை!
Local
26 August 2026
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!
Local
26 August 2026
விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள்: ரஜினிகாந்தின் பதில் ?
Local
26 August 2026
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்: அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!
Local
26 August 2026
ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கிய ஈரான்!
Local
26 August 2026