General26 August 2026

கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் நான்கு பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 வயது சிறுமி உட்பட இரு பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடம்பன், வெடித்தலத்தீவு 10ஆம் பிரிவு மற்றும் மாத்தளை–ரத்தோட்டை வீதியின் வெரகம ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கிராண்ட்பாஸ் இங்குருகடை சந்திக்கு அருகில் பாதசாரிக் கடவையை கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பர் ரக வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தெஹியத்தகண்டிய களுவெவ பகுதியில் நீராடிக்கொண்டிருந்த 43 வயதுடைய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கற்பிட்டி ஜனசவிபுர கடற்கரைப் பகுதியில் கடற்றொழிலுக்காகச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes