General26 August 2026

தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!

தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் இன்று காலை உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

நினைவு தினத்தை முன்னிட்டு உரும்பிராயிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தியாகி பொன் சிவகுமாரனின் தியாகங்களை நினைவு கூர்ந்து சிறப்பு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தோழர்களான சிறீரங்கேஸ்வரன், மனுசன், தீசன், சஞ்சீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி தமது நினைவேந்தல் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
Related recommendation
Hiru TV News | Programmes