திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653
மின்னஞ்சல்: [email protected]
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்திலுள்ள எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653
மின்னஞ்சல்: [email protected]
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்திலுள்ள எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Latest News
காஸா அமைதி சபை தோல்வியடைந்துவிட்டது- சர்வதேச அமைப்புகள் கவலை!
Local
27 August 2026
நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே புதிய திருத்தம்: ஜனாதிபதி திட்டவட்டம்
Local
27 August 2026
இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றித் தாயகம் திரும்பலாம்!
Local
27 August 2026
நுவரெலியா - கிரெகரி வாவியின் நீரை குடிப்பதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!
Local
27 August 2026
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - அவசர உதவி எண்ணும் அறிவிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு -காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கினால் 95 பேர் பலி - நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவே காரணமாம்!
Local
26 August 2026
இலங்கையின் ருமேஷ் தரங்க உலகளவில் முதலிடம்!
Local
26 August 2026
சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
Local
26 August 2026
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!
Local
26 August 2026