தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களிடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஒருவர், திமுக ஆட்சியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் மற்றும் அம்பேத்கர் அயலகத் திட்டம் உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக ஆட்சியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விமர்சித்தார்.
மேலும், பிற மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசைக் காரணம் காட்டி தப்பிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது பேசிய கோவி செழியன், அண்ணாவின் கருத்தை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியுடன் வருபவர்களைப் போன்றவர்கள் என்றும், ஆளுங்கட்சியினர் எண்ணெயுடன் கூடிய கரண்டியுடன் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த உறுப்பினர் பேசிய ஒரு பகுதியை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கடந்த காலத்தில் திமுகவுக்காக தான் பணியாற்றியதாகக் குறிப்பிட்டார். தனது அரசியல் பங்களிப்பு குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால், அதற்கு தகுந்த பதில் அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, அவையில் உறுப்பினர்களிடையே கடும் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் கருத்து தெரிவித்த சபாநாயகர், எதிர்க்கட்சியினர் வாளுடன் வந்தாலும், ஆளுங்கட்சியினர் கேடயத்தைக் கொண்டு தற்காத்துக்கொள்ள வேண்டும்; பதிலுக்கு வாளைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார்.
Latest News
பிரித்தானியா செல்லும் முதலமைச்சர் விஜய் : லண்டனில் த்ரிஷா - அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பான தகவல்கள்!
Local
01 September 2026
இளையராஜாவின் குரல் தெய்வீக குரல் - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்!
Local
01 September 2026
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள் - ஜூலை மாதத்தில் மேலும் உயர்ந்த இலங்கையின் வறுமைக் கோடு!
Local
01 September 2026
கார்த்தியைக் தாண்டிய 'சர்தார்'! ஆச்சரியத்தில் உறைந்த சூர்யா!
Local
01 September 2026
காவிந்த ஜயவர்தனவின் வீட்டுக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு!
Local
01 September 2026
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்களுக்கு புதிய இணையத்தளங்கள் அறிமுகம்!
Local
01 September 2026
அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Local
01 September 2026
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
Local
01 September 2026
கிழக்கு மாகாணக் கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
01 September 2026