General28 August 2026

கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்

இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அன்றாட மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எலித் தொல்லைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எலிகள் மூலம் ரேபிஸ் (Rabies) ,  எலிக்காய்ச்சல்  உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், கொழும்புக்கு வரும் மக்களின் சுகாதாரத்திற்கும் இது அச்சுறுத்தலாக இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொழும்பில் உள்ள முக்கிய விடுதிகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகரின் பல பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உணவாகக் உட்கொள்ளும் எலிகள், தற்போது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

மேலும், பல்வேறு இடங்களில் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ளும் எலிகளால் கட்டிடங்கள், சொத்துக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் சேதமடைவதாக மக்கள் கூறுகின்றனர்.

எலித் தொல்லையை கட்டுப்படுத்த குப்பைகளை முறையாக அகற்றுதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் வடிகால் அமைப்புகளை சுத்தமாகப் பராமரித்தல் அவசியமாகும்.

இதற்காக கொழும்பு நகர அதிகாரிகளுடன், நகரில் வசிக்கும் மக்களும் கொழும்புக்கு வருகை தரும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டியது சமமான பொறுப்பாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes