International29 August 2026

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிரடி மாற்றங்கள் – உதயநிதியின் கைகளுக்குச் செல்லும் அதிகாரங்கள்?

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கை 77இலிருந்து 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனுடன், கட்சியில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மாநகரம் 10 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், கோயம்புத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தலா 5 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தொடர்ந்து அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் பல மூத்த நிர்வாகிகள் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, இளம் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய விதிகளும், கட்சி மறுசீரமைப்பும் மூத்த தலைவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, உதயநிதி ஸ்டாலினின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes