எதிர்கால சந்ததியினருக்காகப் பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்கு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரியுள்ளது.
ஒரு சிறுபொழுது வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு மாற்றாக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிப் போத்தல்கள் அல்லது சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விசேட சுற்றுநிருபம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன், திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் ஊடாக, உற்பத்தியாளர்களின் இணக்கப்பாட்டுடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விசேட நாடளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டதிட்டங்களுக்கும் அப்பால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தலை உடன் எடுத்துச் செல்வது போன்ற சிறிய அன்றாடப் பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு சிறுபொழுது வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு மாற்றாக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிப் போத்தல்கள் அல்லது சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விசேட சுற்றுநிருபம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன், திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் ஊடாக, உற்பத்தியாளர்களின் இணக்கப்பாட்டுடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விசேட நாடளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டதிட்டங்களுக்கும் அப்பால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தலை உடன் எடுத்துச் செல்வது போன்ற சிறிய அன்றாடப் பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
Latest News
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையில் சாதனை படைத்த சமரி அத்தப்பத்து
Local
02 September 2026
சிரிக் நகர தாக்குதலுக்குப் பதிலடி: ஜோர்தான் படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
Local
02 September 2026
இன்றைய வானிலை எப்படி? : கடலுக்குச் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
02 September 2026
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடர்கிறது
Local
02 September 2026
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி அதிகரிப்பு
Local
02 September 2026
தமிழக சட்டப்பேரவையை ஆக்கிரமிக்கும் மன்மத வணக்கம்
Local
02 September 2026
125 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்ஜன்டீன வீரர் என்சோ பெர்னாண்டஸ்
Local
02 September 2026
இலங்கையின் பொதுக்கடன் 33 ட்ரில்லியன்களாக அதிகரித்துள்ளது.
Local
02 September 2026
கொழும்பு துறைமுகத்தில் போதைவஸ்து மீட்பு: சர்வதேச வலையமைப்பு குறித்து விசாரணை
Local
02 September 2026
வறண்ட காலநிலை: 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Local
02 September 2026