நேபாளத்தில் வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்த நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பாடசாலையின் அதிபர் ராஜேந்திர தவாடி, சரியான நேரத்தில் தான் எடுத்த முடிவால் 900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இந்தப் பாடசாலையில் மொத்தம் 1,600 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில், அந்தப் பகுதியில் வெள்ள அபாயம் குறித்து சில நிமிடங்களுக்குள் வெவ்வேறு நபர்களிடமிருந்து தனக்கு தொடர்ச்சியாக நான்கு எச்சரிக்கைத் அழைப்புகள் வந்ததாக அதிபர் ராஜேந்திர தவாடி பிபிசி செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வெள்ளநீர் ஏற்கனவே மேல்மட்டப் பகுதியான பெத்ரவாதி குடியேற்றத்துக்குள் புகுந்துவிட்டதாக அந்த அழைப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தாமதிக்காமல் மாணவர்களை உடனடியாக வெளியேற்ற அவர் முடிவு செய்தார்.
“வெள்ளம் வரும் என்ற எச்சரிக்கை பொய்யாகப் போய், அன்றைய வகுப்புகள் தடைபட்டாலும் அதனால் பெரிய இழப்பு எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை; ஆனால், ஒருவேளை வெள்ளம் வந்துவிட்டால் அது நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் உயிரைப் பறித்துவிடும் பேரழிவாக மாறிவிடும்” என எண்ணியதாக அவர் கூறினார்.
அவர்கள் உயர்வான பகுதிக்கு வெளியேறிச் சென்றுகொண்டிருந்த போதே, ஆற்றிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இருந்த விடுதி கட்டடம் வெள்ளநீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்ததாகக் கூறியுள்ளார்.
"நாங்கள் இன்னும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால், மாணவர்களும் நானும் இன்று உங்களிடம் பேசியிருக்க முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடசாலையில் மொத்தம் 1,600 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில், அந்தப் பகுதியில் வெள்ள அபாயம் குறித்து சில நிமிடங்களுக்குள் வெவ்வேறு நபர்களிடமிருந்து தனக்கு தொடர்ச்சியாக நான்கு எச்சரிக்கைத் அழைப்புகள் வந்ததாக அதிபர் ராஜேந்திர தவாடி பிபிசி செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வெள்ளநீர் ஏற்கனவே மேல்மட்டப் பகுதியான பெத்ரவாதி குடியேற்றத்துக்குள் புகுந்துவிட்டதாக அந்த அழைப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தாமதிக்காமல் மாணவர்களை உடனடியாக வெளியேற்ற அவர் முடிவு செய்தார்.
“வெள்ளம் வரும் என்ற எச்சரிக்கை பொய்யாகப் போய், அன்றைய வகுப்புகள் தடைபட்டாலும் அதனால் பெரிய இழப்பு எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை; ஆனால், ஒருவேளை வெள்ளம் வந்துவிட்டால் அது நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் உயிரைப் பறித்துவிடும் பேரழிவாக மாறிவிடும்” என எண்ணியதாக அவர் கூறினார்.
அவர்கள் உயர்வான பகுதிக்கு வெளியேறிச் சென்றுகொண்டிருந்த போதே, ஆற்றிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இருந்த விடுதி கட்டடம் வெள்ளநீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்ததாகக் கூறியுள்ளார்.
"நாங்கள் இன்னும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால், மாணவர்களும் நானும் இன்று உங்களிடம் பேசியிருக்க முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.
Latest News
திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' டுபாய் அதிகாரிகளால் கைது
Local
01 September 2026
யாழ். வடமராட்சியில் 20 ஏக்கர் அரச காணி இந்திய நிறுவனத்திற்கு குத்தகை : மக்கள் கடும் எதிர்ப்பு!
Local
01 September 2026
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது
Local
01 September 2026
வலைகளில் சிக்குண்ட பென்குயின்களுக்கு வரப்பிரசாதமாகும் நவீன உடை: சிலி ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Local
01 September 2026
22வது திருத்தச் சட்டமூல மனுக்கள்: பூரண அமர்வு கோரிக்கை நிராகரிப்பு!
Local
01 September 2026
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!
Local
01 September 2026
பிரபல நடிகருக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி : அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கவலை!
Local
01 September 2026
ரொஷான் அமரசிங்க CID பணிப்பாளராக நியமனம்!
Local
01 September 2026
நகைப் பிரியர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு : இன்றைய தங்க விலை நிலவரம் இதோ!
Local
01 September 2026