General31 August 2026

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்- சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வ விளக்கத்தை கோரினார் தயாசிறி ஜயசேகர

தற்போதைய பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், நாடாளுமன்ற மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள அல்லது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

அதேவேளை,சபைக்குள் பிரதம நீதியரசர் தொடர்பில் சில உறுப்பினர்கள் எழுப்பிய சில விடயங்களையும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டுகளும் உண்மையானவை என தான் முன்முடிவுக்கு வரவில்லை எனவும், அவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளாக மாத்திரமே கருதுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையானதாக இருந்தால், சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அவை பொய்யானதாக இருந்தால், பிரதம நீதியரசரின் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes