யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெற்றிலைக்கேணி மற்றும் ஆழியவளை பகுதிகளை உள்ளடக்கிய குறித்த காணியில், அபிவிருத்தி என்ற போர்வையில் கலாசார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்க முடியாது என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், குறித்த 20 ஏக்கர் காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தங்களது மண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன், பல தியாகங்களைச் சுமந்த மண் என்பதால், இளைய தலைமுறையை சீரழிக்கும் வகையிலான கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்பு தொடர்பில் சூரியன் செய்திப் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தியே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த திட்டத்தின் ஊடாக சுமார் 1,200 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆன்மீகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்துறையை மையமாகக் கொண்டு இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுர்வேதத்தை சுற்றுலாத்துறையுடன் இணைக்கும் நடவடிக்கையாகவே இது முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், தொழிற்துறைசார் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாகவும், குறித்த நிலையம் கொழும்பில் இயங்கும் ஸ்பா நிலையங்களைப் போன்று அமையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் வெற்றிலைக்கேணி மற்றும் தாழையடி பகுதி மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், குறித்த திட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எதிர்ப்புகள் அரசியல் ரீதியானவை எனவும், பொருளாதார நன்மைகளை எதிர்பார்க்காத தரப்பினரே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
Latest News
வளைவு அல்ல, முழு வட்டம்: சீனாவின் உயரமான பாலத்தின் கீழ் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அற்புத வானவில்!
Local
01 September 2026
இயக்குநராகும் ரவி மோகன் : இசையமைப்பாளராக களமிறங்கும் கெனிஷா!
Local
01 September 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Local
01 September 2026
செப்டம்பர் 12 பேரணிக்கு அஞ்சி தன்னை சிறையில் அடைக்கத் திட்டம்: நாமல் ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு!
Local
01 September 2026
பிரிந்தாலும் தொடரும் நட்பு : முன்னாள் மனைவி குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
என்னை நீக்கிவிட்டு வேறொருவரை நடிக்க வைத்தார்கள்: ஆரம்பகால அவமானம் குறித்து மனம் திறந்த சூரி!
Local
01 September 2026
மூதாட்டியின் பாசத்துக்குரிய அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் விஜய் - விலைமதிப்பற்ற பரிசால் இன்ப அதிர்ச்சி!
Local
01 September 2026
அழிவின் விளிம்பில் அபூர்வ உயிரினங்கள்: இந்தோனேசியாவை உலுக்கும் காட்டுத்தீ!
Local
01 September 2026
74 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? - ஆச்சரியத்தில் மருத்துவ உலகை அதிர வைத்த சம்பவம்!
Local
01 September 2026
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கப்படாது! - ஹர்ஷன நாணயக்கார
Local
01 September 2026