யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 20 ஏக்கர் அரச காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெற்றிலைக்கேணி மற்றும் ஆழியவளை பகுதிகளை உள்ளடக்கிய குறித்த காணியில், அபிவிருத்தி என்ற போர்வையில் கலாசார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்க முடியாது என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், குறித்த 20 ஏக்கர் காணியை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தங்களது மண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன், பல தியாகங்களைச் சுமந்த மண் என்பதால், இளைய தலைமுறையை சீரழிக்கும் வகையிலான கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்பு தொடர்பில் சூரியன் செய்திப் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தியே குறித்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த திட்டத்தின் ஊடாக சுமார் 1,200 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆன்மீகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்துறையை மையமாகக் கொண்டு இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுர்வேதத்தை சுற்றுலாத்துறையுடன் இணைக்கும் நடவடிக்கையாகவே இது முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், தொழிற்துறைசார் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாகவும், குறித்த நிலையம் கொழும்பில் இயங்கும் ஸ்பா நிலையங்களைப் போன்று அமையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் வெற்றிலைக்கேணி மற்றும் தாழையடி பகுதி மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், குறித்த திட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எதிர்ப்புகள் அரசியல் ரீதியானவை எனவும், பொருளாதார நன்மைகளை எதிர்பார்க்காத தரப்பினரே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
Latest News
சிரிக் நகர தாக்குதலுக்குப் பதிலடி: ஜோர்தான் படைத்தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
Local
02 September 2026
இன்றைய வானிலை எப்படி? : கடலுக்குச் செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
02 September 2026
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடர்கிறது
Local
02 September 2026
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி அதிகரிப்பு
Local
02 September 2026
தமிழக சட்டப்பேரவையை ஆக்கிரமிக்கும் மன்மத வணக்கம்
Local
02 September 2026
125 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்ஜன்டீன வீரர் என்சோ பெர்னாண்டஸ்
Local
02 September 2026
இலங்கையின் பொதுக்கடன் 33 ட்ரில்லியன்களாக அதிகரித்துள்ளது.
Local
02 September 2026
கொழும்பு துறைமுகத்தில் போதைவஸ்து மீட்பு: சர்வதேச வலையமைப்பு குறித்து விசாரணை
Local
02 September 2026
வறண்ட காலநிலை: 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Local
02 September 2026
சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
Local
02 September 2026