கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாவது கட்ட வளர்ச்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக துறைமுகத்தின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற துறைமுக பொறியியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020-2022 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஜனவரி 03 ஆம் திகதியளவில் நிறைவடையவிருந்த போதிலும், மேலும் ஒன்றரை ஆண்டுகள் கடந்தாலும் இதனை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக்குழுவும் தனித்தனியாகச் செயற்பட வேண்டும் என்ற போதிலும், ஒரே தரப்பினர் இரு பிரிவுகளிலும் செயற்படுவதால் பக்கச்சார்பற்ற தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இவ்வளவு பெரிய திட்டத்திற்கு இதுவரை நிலையான பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும், அமைச்சரவை அனுமதியின்றி மூன்று முறை திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும், துறைமுக அதிகார சபையின் அனுமதியின்றி கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் துறைமுக அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற துறைமுக பொறியியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020-2022 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஜனவரி 03 ஆம் திகதியளவில் நிறைவடையவிருந்த போதிலும், மேலும் ஒன்றரை ஆண்டுகள் கடந்தாலும் இதனை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக்குழுவும் தனித்தனியாகச் செயற்பட வேண்டும் என்ற போதிலும், ஒரே தரப்பினர் இரு பிரிவுகளிலும் செயற்படுவதால் பக்கச்சார்பற்ற தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இவ்வளவு பெரிய திட்டத்திற்கு இதுவரை நிலையான பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும், அமைச்சரவை அனுமதியின்றி மூன்று முறை திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும், துறைமுக அதிகார சபையின் அனுமதியின்றி கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் துறைமுக அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் - கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
02 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உடலமாக மீட்பு
Local
02 September 2026
விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பது ராகுல் காந்திதான் - தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய பேச்சு!
Local
02 September 2026
நடிகர் ரஜினியுடன் நடனமாடும் கயாடு லோஹர்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Local
02 September 2026
ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல் : ஹோர்முஸ் நீரிணை அருகே மீண்டும் தொடரும் மோதல்!
Local
02 September 2026
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத்தாக்கல் - 8 பேருக்கு அழைப்பாணை
Local
02 September 2026
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய இளைஞர் திடீர் மரணம்
Local
02 September 2026
வறட்சியால் பாதிக்கப்படும் யால தேசிய பூங்கா விலங்குகள்: மேலதிக குளங்களை அமைக்கும் வனவிலங்கு திணைக்களம்!
Local
02 September 2026
அப்பிள் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
Local
02 September 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையில் சாதனை படைத்த சமரி அத்தப்பத்து
Local
02 September 2026