General02 September 2026

2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரை (ICC Women's Champions Trophy), இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில், இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகள் உள்ளதாகக் குறிப்பிட்டு, இந்தியாவுக்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த தொடரானது 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவின், மும்பை நகரில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes