அரசின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ முற்றாக நிராகரித்துள்ளார்.
உத்தியோகபூர்வ மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிடாமல் நாட்டின் கடன் சுமை குறித்து இத்தகைய தகவல்கள் பரப்பப்படுவது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி அரசாங்கக் கடன் 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தன.
எனினும், இந்த அதிகரிப்புக்கான அடிப்படையை அந்த அறிக்கைகள் தெளிவாக விளக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில தரவுகள் பிழையானவை என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடன் தரவுகள் காலாண்டுக்கு ஒருமுறை கடன் அறிக்கை (Debt Bulletin) ஊடாக வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
தனிப்பட்ட நாடுகள், பன்முக அமைப்புகள், இருதரப்பு மற்றும் வர்த்தக மூலங்களில் பெறப்பட்ட கடன் விபரங்கள் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் துல்லியமாக உள்ளடக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அரசின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னரும் செய்திகளைப் பிரசுரிப்பதற்கு முன்னரும் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும், ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசின் கடன் அதிகரிக்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உத்தியோகபூர்வ மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிடாமல் நாட்டின் கடன் சுமை குறித்து இத்தகைய தகவல்கள் பரப்பப்படுவது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி அரசாங்கக் கடன் 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தன.
எனினும், இந்த அதிகரிப்புக்கான அடிப்படையை அந்த அறிக்கைகள் தெளிவாக விளக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில தரவுகள் பிழையானவை என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடன் தரவுகள் காலாண்டுக்கு ஒருமுறை கடன் அறிக்கை (Debt Bulletin) ஊடாக வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
தனிப்பட்ட நாடுகள், பன்முக அமைப்புகள், இருதரப்பு மற்றும் வர்த்தக மூலங்களில் பெறப்பட்ட கடன் விபரங்கள் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் துல்லியமாக உள்ளடக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அரசின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னரும் செய்திகளைப் பிரசுரிப்பதற்கு முன்னரும் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும், ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசின் கடன் அதிகரிக்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
“யாரும் ஓடிவிடக்கூடாது” – தமிழக சட்டமன்றத்தில் வெடித்த வார்த்தை மோதல்!
Local
03 September 2026
ஒரு மாம்பழம் 11 இலட்சமா? யாழில் நடந்த சுவாரஸ்யமான ஏலம்!
Local
03 September 2026
சமிந்த குலரத்னவின் முறைப்பாடு - கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னிலை
Local
03 September 2026
கெஹெல்பத்தர பத்மேவின் விளக்கமறியல் நீடிப்பு
Local
03 September 2026
இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – 21 நாடுகளின் அதிர்ச்சி அறிக்கை!
Local
03 September 2026
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!
Local
03 September 2026
உடற்தகுதி பரிசோதனை இல்லாமலேயே இங்கிலாந்து தொடருக்கு குசல் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டாரா?
Local
03 September 2026
"குற்றம் செய்தவருக்கே அதன் தீவிரம் தெரியும்": நாமல் ராஜபக்ஷ குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து!
Local
03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
Local
03 September 2026
தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம்
Local
03 September 2026