உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவர்களில் சுமார் 1.5 கோடி சிறுவர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியான அல்லது தவறான உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும், சுமார் 90 இலட்சம் சிறுவர்கள் தவறான உரையாடல்கள் அல்லது படங்களைப் பகிருமாறு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், சுமார் 40 இலட்சம் சிறுவர்களின் தனிப்பட்ட அல்லது தவறான நிழற்படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவாகியுள்ள இத்தகைய சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் சமூக ஊடகத் தளங்கள் மூலம் இடம்பெற்றுள்ளதாகவும் UNICEF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட தவறான படங்கள் அல்லது காணொளிகளால் சுமார் 11 இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் UNICEF தெரிவித்துள்ளது.
இத்தகைய சம்பவங்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உயிர் மாய்ப்பு அல்லது சுயகாயப்படுத்தல் குறித்த எண்ணங்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை , சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட புதிய வகையான இணையவழி துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் UNICEF வலியுறுத்தியுள்ளது.
Latest News
சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
03 September 2026
இலங்கையில் ஒரே நாளில் சடசடவென அதிகரித்த தங்க விலை!
Local
03 September 2026
ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஜடேஜாவின் இன்ஸ்டா வரவு - மீண்டும் வைரலாகும் தோனி - ஜடேஜாவின் பாசப் பிணைப்பு!
Local
03 September 2026
முன்னாள் காதலர்களை மீண்டும் சந்திக்க ஆசையா?
Local
03 September 2026
முதலமைச்சர் விஜய் பெயரில் AI டீப்ஃபேக் மோசடி : பின்னணியில் பாகிஸ்தான் ஃபேஸ்புக் கணக்குகள்?
Local
03 September 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும் அபாயம் நீடிப்பு: எச்சரிக்கிறது இலங்கை சுகாதார அமைச்சு!
Local
03 September 2026
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மீண்டெழுந்த இலங்கை – சாதனை படைக்கும் சுங்கத் திணைக்கள வருமானம்
Local
03 September 2026
“யாரும் ஓடிவிடக்கூடாது” – தமிழக சட்டமன்றத்தில் வெடித்த வார்த்தை மோதல்!
Local
03 September 2026
ஒரு மாம்பழம் 11 இலட்சமா? யாழில் நடந்த சுவாரஸ்யமான ஏலம்!
Local
03 September 2026
சமிந்த குலரத்னவின் முறைப்பாடு - கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னிலை
Local
03 September 2026