General04 September 2026

உயர் அழுத்த மின் பாதைகள் அருகில் பட்டம் விட வேண்டாம்: தேசிய மின்சார அமைப்பு இயக்கம் எச்சரிக்கை!

உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பட்டங்கள் மற்றும் நூல்கள் உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கியதன் காரணமாக பல மின் பாதைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இது தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிப்பதுடன், அவசரகால நடவடிக்கையாக சில மின் விநியோகப் பாதைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குப் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம், கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes