General05 September 2026

சஜித் ஆட்சியில் மலையகப் பிரச்சினைகளுக்கு முழுத் தீர்வு கிடைக்காவிட்டாலும் போராடி உரிமைகளைப் பெறலாம்: பழனி திகாம்பரம்!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் மலையகப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்துவிடுவார்கள் என்று கூற முடியாது.இருப்பினும், அவர்களின் ஆட்சியில் ஓரளவுக்குப் போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பிரதேச சபைகள் மற்றும் அதிகார சபைகள் மூலமாக சில உரிமைகள் மற்றும் சலுகைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பிற்காகப் போராட வேண்டியுள்ளது.

முழுமையான தீர்வுகள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த திட்டங்களைச் செயற்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes