பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முழுமையான தடையை விதித்துள்ளது.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்க புதிய சுற்றறிக்கையின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இத்தகைய விதிகளை மீறி மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த நிகழ்வை உடனடியாகத் தடை செய்வதற்கான முழுமையான அதிகாரம் குறித்த சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய செயற்திட்டத்தின் அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.
நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்படும் 'கிரிக்கெட் சமர்' (Big Matches) தொடர்பில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது குறித்துப் பெற்றோர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்க புதிய சுற்றறிக்கையின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இத்தகைய விதிகளை மீறி மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த நிகழ்வை உடனடியாகத் தடை செய்வதற்கான முழுமையான அதிகாரம் குறித்த சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய செயற்திட்டத்தின் அலுவலகத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.
நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்படும் 'கிரிக்கெட் சமர்' (Big Matches) தொடர்பில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது குறித்துப் பெற்றோர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு நிகரான 1 பில்லியன் டொலர் கடத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி
Local
06 September 2026
வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர: சிஐடி தகவல்
Local
06 September 2026
மின் நுகர்வு குறைவு; மின் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்
Local
06 September 2026
Lanka Chairman's Business Excellence Awards 2026: 'ஹிரு' ஊடகக் குழுமம் பல விருதுகளை வென்று சாதனை!
Local
06 September 2026
துலீப் கிண்ணம் 2026 இறுதிப்போட்டி: முதல் நாளில் East Zone அணி வலுவான தொடக்கம்!
Local
06 September 2026
22 ஆவது திருத்தம் தொடர்பான தீர்மானம் கிடைத்ததும், விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி
Local
06 September 2026
துலீப் டிராபி 2026: சிராஜின் பந்துவீச்சை விளாசிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி!
Local
06 September 2026
டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
Local
06 September 2026
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் வியந்த உலக நாடுகள் - அமைச்சர் லால்காந்த பெருமிதம்
Local
06 September 2026
உலகக் கிரிக்கெட்டுக்கு வைபவ் சூர்யவன்ஷி மிகப்பெரிய சொத்தாக இருப்பார்: முன்னாள் வீரர் பாராட்டு!
Local
06 September 2026