போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 11 பேருக்கு மரணத் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தின் அரச ஊடகமான 'அல்-அஹ்ராம்' தகவலின்படி, போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டமை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
'மிஷன் இம்போசிபிள்' என்ற குற்றவியல் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த 39 வயதான சாரா கலீஃபா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த வழக்கில் மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 7 பேர் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, எகிப்திய சட்டப்படி நாட்டின் தலைமை மதகுருவின் (Grand Mufti) ஆலோசனைப் பெறப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 750 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இலத்திரனியல் சான்றுகள் மற்றும் 20 சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சாரா கலீஃபாவின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
எகிப்தின் அரச ஊடகமான 'அல்-அஹ்ராம்' தகவலின்படி, போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டமை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
'மிஷன் இம்போசிபிள்' என்ற குற்றவியல் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த 39 வயதான சாரா கலீஃபா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த வழக்கில் மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 7 பேர் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, எகிப்திய சட்டப்படி நாட்டின் தலைமை மதகுருவின் (Grand Mufti) ஆலோசனைப் பெறப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 750 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இலத்திரனியல் சான்றுகள் மற்றும் 20 சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சாரா கலீஃபாவின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
Latest News
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளது - ஐநா மனித உரிமைகள் அலுவலகம்
Local
08 September 2026
கொழும்பில் சர்வதேச மரதன் போட்டி - உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு!
Local
08 September 2026
அரச நிறுவனங்களில் டிஜிட்டல் புரட்சி: அனைத்துத் துறைகளிலும் புதிய அலகுகளை நிறுவ அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
Local
08 September 2026
பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
Local
08 September 2026
ரவி மோகன் – கெனிஷா புகைப்பிடிக்கும் காட்சியால் பரபரப்பு : கோவா காணொளியால் பரவும் புதிய சர்ச்சை!
Local
08 September 2026
டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு கடன் நிதியுதவி
Local
08 September 2026
16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!
Local
08 September 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
Local
08 September 2026
2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்
Local
08 September 2026
தனியார் துறைக்கும் இணையவழி தொடருந்து பருவகாலச் சீட்டு - ஒக்டோபர் 1 முதல் வீட்டிலிருந்தே பெறலாம்!
Local
08 September 2026