கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், மேன்முறையீட்டின் அடிப்படையில் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, உயர்நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியே இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவர் மரணிக்க வழிவகுத்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், மேல் நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்கள் மூவரையும் நிரபராதிகளாக அறிவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவிழக்கச் செய்யக் கோரி பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அண்மையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
அத்துடன், இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், வழக்கு தொடர்பான அறிவித்தலை பிரதிவாதிகளுக்கு அனுப்பி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த முற்பட்ட போதே, பிரேமலால் ஜயசேகர கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதியே வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டையும் முன்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியே இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவர் மரணிக்க வழிவகுத்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், மேல் நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்கள் மூவரையும் நிரபராதிகளாக அறிவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவிழக்கச் செய்யக் கோரி பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அண்மையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
அத்துடன், இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், வழக்கு தொடர்பான அறிவித்தலை பிரதிவாதிகளுக்கு அனுப்பி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த முற்பட்ட போதே, பிரேமலால் ஜயசேகர கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதியே வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டையும் முன்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Latest News
இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவரை நியமிக்க பரிசீலனை
Local
11 September 2026
பொலன்னறுவை விவசாயிகள் பேரணியில் உரையாற்றும் ஜனாதிபதி!
Local
11 September 2026
2027 முதல் தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் – பிரதமர்
Local
11 September 2026
மறைந்த இளவரசி டயானாவின் புகழ்பெற்ற ‘Revenge Dress’ ஏலத்திற்கு வருகிறது
Local
11 September 2026
சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டம்
Local
11 September 2026
ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் - பிபாஷா பாசு வெளியிட்ட காணொளியால் பரபரப்பு
Local
11 September 2026
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ரவி மோகன்: புதிய போஸ்டர் வெளியீடு
Local
11 September 2026
ஷிரான் பாசிக்கின் தந்தை கைது
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்
Local
11 September 2026
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
Local
11 September 2026