General07 September 2026

தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது

பொலன்னறுவை, ஹிங்குராங்கொட பகுதியில் தொல்பொருட்களை எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (06) பிற்பகல் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திகம பகுதிகளைச் சேர்ந்த 19, 26, 45, 47 மற்றும் 49 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes