General07 September 2026

நிம்மதி பெருமூச்சு! செப்டம்பர் தொடக்கத்தில் குறைந்த டெங்கு பாதிப்பு!

நடப்பு ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 96,482 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், செப்டம்பர் மாதத்தின் கடந்த ஆறு நாட்களில் 991 நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், டெங்கு நோயாளிகளின் பதிவில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சி தென்படுகிறது.

மொத்த நோயாளிகளில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,527 என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆகும்.
Related recommendation
Hiru TV News | Programmes