விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (8) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில், அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதன்ன தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் குடும்ப உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நலன் விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் நேற்று விளக்கமறியல் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில், அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதன்ன தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு அமைய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் குடும்ப உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நலன் விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் நேற்று விளக்கமறியல் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
Local
11 September 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் - திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்
Local
11 September 2026
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் : முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து!
Local
11 September 2026
ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!
Local
11 September 2026