வட மாகாண பாடசாலைகளில் 170 தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது மொத்த ICT ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 31 சதவீத வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தீவகம், தென்மராட்சி மற்றும் மடு ஆகிய கல்வி வலயங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காரணமாக, பாடசாலைகளில் பழுதடையும் கணினிகள், ஸ்மார்ட் பலகைகள் மற்றும் மடிக்கணினிகளைப் பழுதுபார்ப்பதிலும், அவற்றுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் பெருமளவு தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை எரிப்பது அல்லது மண்ணில் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Latest News
டிட்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு டிசம்பர் 31 வரை நீடிப்பு
Local
09 September 2026
2030-க்குள் மனிதகுலத்திற்கு பேராபத்தா? – AI நிறுவனத்தின் ஆய்வாளர் திடீர் ராஜினாமாவின் பின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
Local
09 September 2026
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: ஜனாதிபதி விடுத்த கோரிக்கை
Local
09 September 2026
மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்ட “கொண்ட ரஞ்சித்”!
Local
09 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதி!
Local
09 September 2026
விளக்கம் அளித்தும் ஓயாத சர்ச்சை: சட்டமன்ற மரபுகளை மீறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? - பதவியை கேள்விக்குள்ளாக்கிய திமுக!
Local
09 September 2026
சுகீஸ்வர பண்டார எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
Local
09 September 2026
சிறுவர்களின் உடல்ரீதியான தொடுகை: சம்மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தல்
Local
09 September 2026
"சிக்மா படத்திற்கு விஜய் சேரின் ஆதரவு மிகப்பெரிய அடையாளம்" – சிலிர்க்க வைக்கும் சந்தீப் கிஷன் பேச்சு!
Local
09 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் எதிரொலி - கொழும்பு வந்தடைந்தது 'ஐ.என்.எஸ் உதயகிரி' போர்க்கப்பல்
Local
09 September 2026