General08 September 2026

கையூட்டல் பெற்ற பாடசாலை அதிபர் கைது!

இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இரண்டரை இலட்சம் ரூபாயை கையூட்டலாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காலி பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான அதிபர், ஒரு பிள்ளைக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் என மொத்தம் ஆறு இலட்சம் ரூபாயை கையூட்டலாக கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அந்தத் தொகை மூன்று இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டுக்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes