வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பணியாற்றிய சட்டத்தரணி அஜித் ரோஹண இன்றுடன் (08) காவல்துறை சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
38 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றுள்ளார்.
அவரது ஓய்வினை முன்னிட்டு இன்று குருநாகல் வெலகெதர மைதானத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, இலங்கை காவல்துறை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதி காவல்துறைமா அதிபராக (DIG) பதவியேற்றவர் என்ற வரலாற்றைப் படைத்ததுடன், சட்டமாணி (LL.B) பட்டம் பெற்ற சட்டத்தரணியாகவும், மக்கள் மரியாதையைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும் விளங்குகிறார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் காவல்துறை ஊடகப் பேச்சாளராகச் சிறப்பான தகவல் தொடர்புப் பணியை ஆற்றிய அவர், தனது தொழில்முறைத் திறமை மற்றும் எளிமையான, நட்புரீதியான குணங்களால் மக்களிடையே பெரிதும் பிரசித்தி பெற்றார்.
அவிசாவளையின் கொஸ்கம பகுதியில் பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர், உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளவர் என்பதுடன், 2020 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான சேவையைப் பாராட்டி இவருக்கு கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
38 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றுள்ளார்.
அவரது ஓய்வினை முன்னிட்டு இன்று குருநாகல் வெலகெதர மைதானத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, இலங்கை காவல்துறை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதி காவல்துறைமா அதிபராக (DIG) பதவியேற்றவர் என்ற வரலாற்றைப் படைத்ததுடன், சட்டமாணி (LL.B) பட்டம் பெற்ற சட்டத்தரணியாகவும், மக்கள் மரியாதையைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும் விளங்குகிறார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் காவல்துறை ஊடகப் பேச்சாளராகச் சிறப்பான தகவல் தொடர்புப் பணியை ஆற்றிய அவர், தனது தொழில்முறைத் திறமை மற்றும் எளிமையான, நட்புரீதியான குணங்களால் மக்களிடையே பெரிதும் பிரசித்தி பெற்றார்.
அவிசாவளையின் கொஸ்கம பகுதியில் பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர், உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளவர் என்பதுடன், 2020 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான சேவையைப் பாராட்டி இவருக்கு கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது - இந்திய அமைச்சர் கொழும்பில் கருத்து
Local
09 September 2026
கொழும்பில் முன்னிலைப் போதைப்பொருள் கடத்தல்காரரின் முக்கிய நண்பர்கள் 4 பேர் கைது!
Local
09 September 2026
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்
Local
09 September 2026
பெலன் டோர் (Ballon d'Or) விருதுக்கான ஆண்இ பெண் வீர வீராங்கனைகள் பரிந்துரை
Local
09 September 2026
ஈரானின் ஐந்து கப்பல்களை அழித்ததாக கூறும் அமெரிக்கா
Local
09 September 2026
10 ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றியது ஹங்கேரி
Local
09 September 2026
ட்ரம்பும்-புடினும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்
Local
09 September 2026
சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு: தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தீர்மானம்!
Local
09 September 2026
சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!
Local
09 September 2026
பிரித்தானியாவின் பிரதான வானூர்தி நிலையங்களில் தொழில்நுட்ப பிரச்சினையால் நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் பாதிப்பு
Local
09 September 2026