வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பணியாற்றிய சட்டத்தரணி அஜித் ரோஹண இன்றுடன் (08) காவல்துறை சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
38 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றுள்ளார்.
அவரது ஓய்வினை முன்னிட்டு இன்று குருநாகல் வெலகெதர மைதானத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, இலங்கை காவல்துறை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதி காவல்துறைமா அதிபராக (DIG) பதவியேற்றவர் என்ற வரலாற்றைப் படைத்ததுடன், சட்டமாணி (LL.B) பட்டம் பெற்ற சட்டத்தரணியாகவும், மக்கள் மரியாதையைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும் விளங்குகிறார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் காவல்துறை ஊடகப் பேச்சாளராகச் சிறப்பான தகவல் தொடர்புப் பணியை ஆற்றிய அவர், தனது தொழில்முறைத் திறமை மற்றும் எளிமையான, நட்புரீதியான குணங்களால் மக்களிடையே பெரிதும் பிரசித்தி பெற்றார்.
அவிசாவளையின் கொஸ்கம பகுதியில் பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர், உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளவர் என்பதுடன், 2020 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான சேவையைப் பாராட்டி இவருக்கு கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
38 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றுள்ளார்.
அவரது ஓய்வினை முன்னிட்டு இன்று குருநாகல் வெலகெதர மைதானத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, இலங்கை காவல்துறை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதி காவல்துறைமா அதிபராக (DIG) பதவியேற்றவர் என்ற வரலாற்றைப் படைத்ததுடன், சட்டமாணி (LL.B) பட்டம் பெற்ற சட்டத்தரணியாகவும், மக்கள் மரியாதையைப் பெற்ற சிரேஷ்ட அதிகாரியாகவும் விளங்குகிறார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் காவல்துறை ஊடகப் பேச்சாளராகச் சிறப்பான தகவல் தொடர்புப் பணியை ஆற்றிய அவர், தனது தொழில்முறைத் திறமை மற்றும் எளிமையான, நட்புரீதியான குணங்களால் மக்களிடையே பெரிதும் பிரசித்தி பெற்றார்.
அவிசாவளையின் கொஸ்கம பகுதியில் பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர், உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளவர் என்பதுடன், 2020 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான சேவையைப் பாராட்டி இவருக்கு கௌரவ கலாநிதி பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Latest News
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீமான்: 'சேயோன்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம்!
Local
08 September 2026
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி லுக் சேஞ்ச்: சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் நிழற்படங்கள்!
Local
08 September 2026
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
08 September 2026
இலங்கையில் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி: பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி!
Local
08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்
Local
08 September 2026
சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா வசதி திடீர் ரத்து!
Local
08 September 2026
உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!
Local
08 September 2026
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!
Local
08 September 2026
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!
Local
08 September 2026
இமயம் பாரதிராஜாவின் இறுதித் திரைப்பயணம்... 'புலவர்' சிறு முன்னோட்டம் வெளியீடு!
Local
08 September 2026