எல்லை தாண்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன், சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு கடந்த மார்ச் 30ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, நாட்டின் எல்லைகளைக் கடந்தும் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாக தீவிர குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளையும் இந்தச் சட்டமூலம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு கடந்த மார்ச் 30ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, நாட்டின் எல்லைகளைக் கடந்தும் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாக தீவிர குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளையும் இந்தச் சட்டமூலம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Latest News
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதி!
Local
09 September 2026
விளக்கம் அளித்தும் ஓயாத சர்ச்சை: சட்டமன்ற மரபுகளை மீறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? - பதவியை கேள்விக்குள்ளாக்கிய திமுக!
Local
09 September 2026
சுகீஸ்வர பண்டார எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
Local
09 September 2026
சிறுவர்களின் உடல்ரீதியான தொடுகை: சம்மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தல்
Local
09 September 2026
"சிக்மா படத்திற்கு விஜய் சேரின் ஆதரவு மிகப்பெரிய அடையாளம்" – சிலிர்க்க வைக்கும் சந்தீப் கிஷன் பேச்சு!
Local
09 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் எதிரொலி - கொழும்பு வந்தடைந்தது 'ஐ.என்.எஸ் உதயகிரி' போர்க்கப்பல்
Local
09 September 2026
இந்தியாவில் இதுவரை எங்குமே கண்டறியப்படாத 5 ஓராங்குட்டான் குட்டிகள் ஒடிசாவில் மீட்பு!
Local
09 September 2026
உள்நாட்டு தீவிரவாதிகளால் தான் அதிக ஆபத்து: அமெரிக்கர்களை மிரள வைக்கும் புதிய கருத்துக்கணிப்பு முடிவு!
Local
09 September 2026
நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரண்டு பெண் சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
Local
09 September 2026
இணையத்தை கலக்கும் 80s ட்ரெண்ட்: முதலமைச்சர் விஜய்யுடன் நடிகர் சதீஷ் வெளியிட்ட கலக்கல் நிழற்படம்!
Local
09 September 2026