General08 September 2026

பலத்த காற்று குறித்த எச்சரிக்கை

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கரையோரத்தை பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

எனவே, அப்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes