இலங்கையில் கடந்த ஆண்டில் பல உயர்மட்டக் குற்றவியல் விசாரணைகள், ஊழல் எதிர்ப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகள் முன்னெடுப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஆழமான சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களுக்கான வேகம் மந்தமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான ஐநா பிரதி உயர்ஸ்தானிகர் அவா டாபோ (Awa Dabo),மாற்றத்திற்கான ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நேர்மறையான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகைத் தாக்கல், முன்னாள் உளவுத்துறை பிரதானியின் கைது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டன.
அத்துடன், இனவாதம் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தொடர்ச்சியான கருத்துக்கள், 2025 ஆம் ஆண்டு நவம்பர் சூறாவளி மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் ஐநா வரவேற்றுள்ளது.
இருப்பினும், பரந்த அளவிலான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.
ஆயுத மோதல் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எவ்வித அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் மீதான அச்சறுத்தல்கள் தொடர்வதாகவும் அவா டாபோ சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து சுயாதீனமாக இயங்கும் 'சுயாதீன வழக்கு தொடுநர்' (Independent Public Prosecutor) பொறிமுறையை நிறுவும் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், காவல்துறை மற்றும் இராணுவக் கட்டமைப்புகளில் தீவிர மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்தும், முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில ஆபத்தான சரத்துக்கள் குறித்தும் ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், இலங்கையின் கடன் சுமை ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி உயர்ஸ்தானிகர், 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் அரச வருவாயில் சுமார் 82 சதவீதம் கடன் வட்டி மற்றும் கடன் மீள் செலுத்தலுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இது சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால், இலங்கைக்கு மேலதிக அபிவிருத்தி உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான ஐநா பிரதி உயர்ஸ்தானிகர் அவா டாபோ (Awa Dabo),மாற்றத்திற்கான ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நேர்மறையான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகைத் தாக்கல், முன்னாள் உளவுத்துறை பிரதானியின் கைது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டன.
அத்துடன், இனவாதம் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தொடர்ச்சியான கருத்துக்கள், 2025 ஆம் ஆண்டு நவம்பர் சூறாவளி மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் ஐநா வரவேற்றுள்ளது.
இருப்பினும், பரந்த அளவிலான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.
ஆயுத மோதல் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எவ்வித அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் மீதான அச்சறுத்தல்கள் தொடர்வதாகவும் அவா டாபோ சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து சுயாதீனமாக இயங்கும் 'சுயாதீன வழக்கு தொடுநர்' (Independent Public Prosecutor) பொறிமுறையை நிறுவும் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், காவல்துறை மற்றும் இராணுவக் கட்டமைப்புகளில் தீவிர மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்தும், முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில ஆபத்தான சரத்துக்கள் குறித்தும் ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், இலங்கையின் கடன் சுமை ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி உயர்ஸ்தானிகர், 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் அரச வருவாயில் சுமார் 82 சதவீதம் கடன் வட்டி மற்றும் கடன் மீள் செலுத்தலுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இது சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால், இலங்கைக்கு மேலதிக அபிவிருத்தி உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
Latest News
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026