செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) காணொளி அழைப்பு மூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய சேவையை, இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்துகிறது.
எதிர்வரும் வியாழக்கிழமை (செப்டெம்பர் 10) முதல், இந்த வசதியை காவல்துறையினர் அறிமுகப்படுத்துகின்றனர்.
இலங்கை காவல்துறையின் 160 ஆவது வருடக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
செவிப்புலன் வலுவிழந்தோரின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
**முறைப்பாடு அளிக்கும் வழிமுறைகள்:**
இந்த சேவைக்காக பிரத்யேக குறுஞ்செய்தி இலக்கம் (Short-code number) அறிமுகப்படுத்தப்படும் வரை, பயனாளிகள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
1. **இலக்கத்தைச் சேமித்தல்:** முதலில் **011-2809980** என்ற தொலைபேசி இலக்கத்தை உங்களது கைபேசியில் சேமித்துக் கொள்ள வேண்டும்.
2. **அழைப்பு மேற்கொள்ளல்:** பின்னர், அந்த இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு குரல் அழைப்பை (Audio call) மேற்கொள்ள வேண்டும்.
3. **இணைப்பைப் பெறுதல்:** அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்ட பின்னர், உங்களது கைபேசிக்கு ஒரு இணைய இணைப்பு (Link) குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
4. **காணொளி அழைப்பில் இணைதல்:** அந்த இணைப்பைத் திறந்து, **“Join Browser”** மற்றும் அதன் பின்னர் **“Join Meeting”** ஆகிய தெரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
இதன் மூலம் காவல்துறையினருடன் நேரடி காணொளி அழைப்பில் இணைந்து செவிப்புலன் வலுவிழந்தோர் தமது முறைப்பாடுகளை எளிதாகத் தெரிவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Latest News
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026