மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் திருப்பங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் சிரிக் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த வெடிச்சத்தங்களுடன் ஏவுகணைத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மினாப் மாகாணம் மற்றும் குஷெம் தீவு ஆகிய பகுதிகளிலும் இந்தத் தாக்குதல்களின் தாக்கம் எதிரொலித்துள்ளதாக அந்தநாட்டு அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதிப் பாதுகாப்பு வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இல்லாமல், கடற்கரை நாடுகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பிராந்திய உரையாடலுக்கும், நிலையான பாதுகாப்புக்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெஹ்ரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீதான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்றும், அதன் பின்னரே எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், தங்களின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய ஈரான் அனுமதி மறுத்த விவகாரத்தில், ஈரான் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் முறைப்பாடளிக்கும் தீர்மானம் சர்வதேச அணுசக்தி முகவரகத்தால் (IAEA) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்குச் சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இதுவொரு இரட்டை வேடக் கொள்கை என ஈரானின் முதல் துணை ஜனாதிபதி மொஹமட் ரேசா அரேஃப் கடுமையாகச் சாடியுள்ளார்; மேலும் அமைதியான நோக்கங்களுக்காக ஈரான் தொடர்ந்து அணுசக்தியைப் பயன்படுத்தும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மறுபுறம், வளைகுடாவின் முக்கியப் போக்குவரத்து வழிகளில் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், பல வணிகக் கப்பல்கள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடற்படை வர்த்தகப் போக்குவரத்து அமைப்பு (UKMTO) எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, ஜெருசலேமிலுள்ள பிரித்தானிய தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேல் எடுத்த முடிவு வருந்தத்தக்கது என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், லெபனான் எல்லைப் பகுதியில் ஜூன் மாத ஒப்பந்தத்தை இஸ்ரேல் சுமார் 7,700 முறை மீறிவிட்டதாக லெபனான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளதுடன், தெற்கு லெபனான் மீது தொடர் வான்வழித் தாக்குதல்களும் அரங்கேறி வருவது மத்திய கிழக்கின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மினாப் மாகாணம் மற்றும் குஷெம் தீவு ஆகிய பகுதிகளிலும் இந்தத் தாக்குதல்களின் தாக்கம் எதிரொலித்துள்ளதாக அந்தநாட்டு அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதிப் பாதுகாப்பு வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இல்லாமல், கடற்கரை நாடுகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பிராந்திய உரையாடலுக்கும், நிலையான பாதுகாப்புக்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெஹ்ரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீதான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்றும், அதன் பின்னரே எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், தங்களின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய ஈரான் அனுமதி மறுத்த விவகாரத்தில், ஈரான் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் முறைப்பாடளிக்கும் தீர்மானம் சர்வதேச அணுசக்தி முகவரகத்தால் (IAEA) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்குச் சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இதுவொரு இரட்டை வேடக் கொள்கை என ஈரானின் முதல் துணை ஜனாதிபதி மொஹமட் ரேசா அரேஃப் கடுமையாகச் சாடியுள்ளார்; மேலும் அமைதியான நோக்கங்களுக்காக ஈரான் தொடர்ந்து அணுசக்தியைப் பயன்படுத்தும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மறுபுறம், வளைகுடாவின் முக்கியப் போக்குவரத்து வழிகளில் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், பல வணிகக் கப்பல்கள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடற்படை வர்த்தகப் போக்குவரத்து அமைப்பு (UKMTO) எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, ஜெருசலேமிலுள்ள பிரித்தானிய தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேல் எடுத்த முடிவு வருந்தத்தக்கது என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், லெபனான் எல்லைப் பகுதியில் ஜூன் மாத ஒப்பந்தத்தை இஸ்ரேல் சுமார் 7,700 முறை மீறிவிட்டதாக லெபனான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளதுடன், தெற்கு லெபனான் மீது தொடர் வான்வழித் தாக்குதல்களும் அரங்கேறி வருவது மத்திய கிழக்கின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
Latest News
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026
பயணிகள் வானூர்தியில் லண்டனுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - காரணம் என்ன?
Local
11 September 2026
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் : முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து!
Local
11 September 2026
ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!
Local
11 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்
Local
11 September 2026
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!
Local
11 September 2026