General11 September 2026

யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கில்,சாட்சியம் அளித்த அரசதரப்புச் சாட்சியாளர் ஒருவர் பொய் சாட்சியம் கூறியதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டுவந்தார்.

அரசதரப்புச் சாட்சியாளரான பாலித்த கமகே என்பவர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியமானது, இதற்கு முன்பு அவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திற்கு முரணாக உள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து, சாட்சியாளர் பாலித்த கமகேவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

Related recommendation
Hiru TV News | Programmes