General12 September 2026

பாதாள உலகக் குழுக்களின் கைகளில் விடுதலை புலிகளின் கைஎறி குண்டுகள்? காவல்துறையினர் அதிரடி சந்தேகம்

போர் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட கைஎறி குண்டுகளே தற்போது பாதாள உலகக் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகக் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், மேல் மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் பாதாள உலகக் குழுக்களின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படை அதிகாரிகளையும் இணைத்துக் கொள்வது குறித்து காவல்துறையினர் பரிசீலித்து வருகின்றனர்.

நடப்பாண்டில் இதுவரை 6 கைஎறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் கல்கிஸ்ஸை காவல்துறைப் பிரிவுக்குள் மட்டும் 3 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

பிந்திய தாக்குதலாக நேற்று தெஹிவளையில் நடத்தப்பட்ட கைஎறி குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலியாகினர்

எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை என்றும், எனவே இந்த தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes