General12 September 2026

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உணவு தவிர்ப்பு போராட்டம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் இன்று (12) உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துதல், உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையிலான பிரஜா சக்தி முறைமையை உடனடியாக நிறுத்துதல், இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவு தவிர்ப்பு போராட்டம், மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes