General12 September 2026

பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் பலி! ஆலய உற்சவத்தில் நடந்த கொடூரம்

மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின்போது வெடித்த பட்டாசு காரணமாக 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (11) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரான் கூனாக்காடு பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தன் தனுஸ்கி என்ற 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஆலய உற்சவம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு பூஜை வழிபாடுகளின்போது பெரிய வெடி ஒன்று கொளுத்தப்பட்டதாகவும், அது வெடிக்காத நிலையில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், வெடிக்காத நிலையில் காணப்பட்ட அந்த வெடியை சிறுவன் பார்வையிடுவதற்காக அருகில் சென்றபோது, அது திடீரென வெடித்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் உடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes