நாட்டை முறையான வகையில் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், நாட்டின் அரசியல் கலாசாரத்திலும் பாரிய மாற்றம் ஏற்படுவது அத்தியாவசியமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியில் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
"ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், ஒருபுறம் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும், மறுபுறம் சமூகத்தையும் சீரமைக்க வேண்டும். பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் போது சமூகம் மிக முக்கிய பங்காற்றுகிறது. அதேபோலவே நாட்டின் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும், பொதுமக்கள் அரசியல்வாதிகளுக்கு அஞ்சிய அல்லது கட்டுப்பட்ட நிலையிலுமே வாழ்ந்து வந்தனர். அத்தகைய சூழலில் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறந்த நல்லுறவு அவசியமாகும்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்ற பின்னர், தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளை அரசியலுக்குள் கொண்டு வந்து குடும்ப அரசியலை வளர்த்தெடுக்கும் போக்கே காணப்பட்டது.
தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமராக இருந்தால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சராக இருந்தால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற நிலமையே இருந்தது.
இத்தகைய அரசியல் பழைய யுகத்துக்குரியதே தவிர, நவீன அரசியலுக்கு ஏற்றதல்ல.
அமைச்சராக இருக்கும் ஒருவர் தனது மனைவியை தனிப்பட்ட செயலாளராகவும், மகனை ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் நியமித்து குடும்ப ஆட்சியை நடத்தும் நிலமையே காணப்பட்டது.
இன்று அந்த மனைவி சிறையில் இருக்கிறார் அல்லவா?
சபாநாயகர் ஒருவர் தனது பரம்பரையையே நாடாளுமன்றத்திற்குள் வைத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றன.
எனினும், கடந்த 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நாட்டின் மக்கள் எடுத்த தீர்மானத்தின் மூலம் இந்த பழைய அரசியல் முறைமை மாற்றியமைக்கப்பட்டு, ஒரு புதிய அரசியல் பாதை உருவாக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரம் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியில் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
"ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், ஒருபுறம் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும், மறுபுறம் சமூகத்தையும் சீரமைக்க வேண்டும். பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் போது சமூகம் மிக முக்கிய பங்காற்றுகிறது. அதேபோலவே நாட்டின் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும், பொதுமக்கள் அரசியல்வாதிகளுக்கு அஞ்சிய அல்லது கட்டுப்பட்ட நிலையிலுமே வாழ்ந்து வந்தனர். அத்தகைய சூழலில் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறந்த நல்லுறவு அவசியமாகும்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்ற பின்னர், தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளை அரசியலுக்குள் கொண்டு வந்து குடும்ப அரசியலை வளர்த்தெடுக்கும் போக்கே காணப்பட்டது.
தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமராக இருந்தால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சராக இருந்தால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற நிலமையே இருந்தது.
இத்தகைய அரசியல் பழைய யுகத்துக்குரியதே தவிர, நவீன அரசியலுக்கு ஏற்றதல்ல.
அமைச்சராக இருக்கும் ஒருவர் தனது மனைவியை தனிப்பட்ட செயலாளராகவும், மகனை ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் நியமித்து குடும்ப ஆட்சியை நடத்தும் நிலமையே காணப்பட்டது.
இன்று அந்த மனைவி சிறையில் இருக்கிறார் அல்லவா?
சபாநாயகர் ஒருவர் தனது பரம்பரையையே நாடாளுமன்றத்திற்குள் வைத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றன.
எனினும், கடந்த 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நாட்டின் மக்கள் எடுத்த தீர்மானத்தின் மூலம் இந்த பழைய அரசியல் முறைமை மாற்றியமைக்கப்பட்டு, ஒரு புதிய அரசியல் பாதை உருவாக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
அணுசக்தி சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஈரானின் அணுசக்தித் தலைவருக்குத் தடை: அமெரிக்காவின் அழுத்தத்தால் விசாவை ரத்து செய்தது ஒஸ்திரியா!
Local
15 September 2026
போலந்து எல்லைக்கு அருகில் ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதலின் எதிரொலி: யுக்ரைனுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க நேட்டோ உறுதி!
Local
15 September 2026
இன்று பல மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு
Local
15 September 2026
தென் செங்கடலில் உள்ள ஹனீஷ் தீவுகளை ஹூதிகள் கைப்பற்றினர்: சவுதி வான் படைத் தளத்தின் மீது தாக்குதல்!
Local
15 September 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ.320 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு
Local
15 September 2026
“பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்”: ஆசியக் கிண்ண சர்ச்சைக்குப் பின் மதன் லால் கருத்து!
Local
15 September 2026
இங்கிலாந்திடம் 0-3 எனத் தொடரை இழந்த பாகிஸ்தானுக்கு ஐசிசி அபராதம்: WTC புள்ளிப் பட்டியலில் புள்ளிகள் குறைப்பு!
Local
15 September 2026
மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் AI பங்குச்சந்தை வீழ்ச்சி: ஆசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!
Local
15 September 2026
ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீதான தாக்குதல்: சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதா?
Local
15 September 2026
க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு:பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்!
Local
14 September 2026