நாட்டை முறையான வகையில் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், நாட்டின் அரசியல் கலாசாரத்திலும் பாரிய மாற்றம் ஏற்படுவது அத்தியாவசியமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியில் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
"ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், ஒருபுறம் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும், மறுபுறம் சமூகத்தையும் சீரமைக்க வேண்டும். பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் போது சமூகம் மிக முக்கிய பங்காற்றுகிறது. அதேபோலவே நாட்டின் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும், பொதுமக்கள் அரசியல்வாதிகளுக்கு அஞ்சிய அல்லது கட்டுப்பட்ட நிலையிலுமே வாழ்ந்து வந்தனர். அத்தகைய சூழலில் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறந்த நல்லுறவு அவசியமாகும்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்ற பின்னர், தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளை அரசியலுக்குள் கொண்டு வந்து குடும்ப அரசியலை வளர்த்தெடுக்கும் போக்கே காணப்பட்டது.
தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமராக இருந்தால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சராக இருந்தால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற நிலமையே இருந்தது.
இத்தகைய அரசியல் பழைய யுகத்துக்குரியதே தவிர, நவீன அரசியலுக்கு ஏற்றதல்ல.
அமைச்சராக இருக்கும் ஒருவர் தனது மனைவியை தனிப்பட்ட செயலாளராகவும், மகனை ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் நியமித்து குடும்ப ஆட்சியை நடத்தும் நிலமையே காணப்பட்டது.
இன்று அந்த மனைவி சிறையில் இருக்கிறார் அல்லவா?
சபாநாயகர் ஒருவர் தனது பரம்பரையையே நாடாளுமன்றத்திற்குள் வைத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றன.
எனினும், கடந்த 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நாட்டின் மக்கள் எடுத்த தீர்மானத்தின் மூலம் இந்த பழைய அரசியல் முறைமை மாற்றியமைக்கப்பட்டு, ஒரு புதிய அரசியல் பாதை உருவாக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரம் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியில் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
"ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், ஒருபுறம் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும், மறுபுறம் சமூகத்தையும் சீரமைக்க வேண்டும். பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் போது சமூகம் மிக முக்கிய பங்காற்றுகிறது. அதேபோலவே நாட்டின் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும், பொதுமக்கள் அரசியல்வாதிகளுக்கு அஞ்சிய அல்லது கட்டுப்பட்ட நிலையிலுமே வாழ்ந்து வந்தனர். அத்தகைய சூழலில் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறந்த நல்லுறவு அவசியமாகும்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்ற பின்னர், தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளை அரசியலுக்குள் கொண்டு வந்து குடும்ப அரசியலை வளர்த்தெடுக்கும் போக்கே காணப்பட்டது.
தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமராக இருந்தால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சராக இருந்தால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற நிலமையே இருந்தது.
இத்தகைய அரசியல் பழைய யுகத்துக்குரியதே தவிர, நவீன அரசியலுக்கு ஏற்றதல்ல.
அமைச்சராக இருக்கும் ஒருவர் தனது மனைவியை தனிப்பட்ட செயலாளராகவும், மகனை ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் நியமித்து குடும்ப ஆட்சியை நடத்தும் நிலமையே காணப்பட்டது.
இன்று அந்த மனைவி சிறையில் இருக்கிறார் அல்லவா?
சபாநாயகர் ஒருவர் தனது பரம்பரையையே நாடாளுமன்றத்திற்குள் வைத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றன.
எனினும், கடந்த 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நாட்டின் மக்கள் எடுத்த தீர்மானத்தின் மூலம் இந்த பழைய அரசியல் முறைமை மாற்றியமைக்கப்பட்டு, ஒரு புதிய அரசியல் பாதை உருவாக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !
Local
14 September 2026
ஏழையாக இறப்பது உன் தவறு – வாழ்க்கையில் முன்னேறுவது குறித்து நடிகர் கருணாஸ் கருத்து!
Local
14 September 2026
“திருடர்களைப் பிடிப்பதில் எல்லை எதுவும் இல்லை: எஞ்சிய பதவி காலத்தில் சகலருக்கும் தண்டனை!”
Local
14 September 2026
பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய 'வீர விநாயகர்': 51,000 உருத்திராக்கங்களால் பிரம்மாண்ட உருவாக்கம்!
Local
14 September 2026
சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!
Local
14 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: செம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை!
Local
14 September 2026
அல்டிமேட் செம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் வரலாற்று சாதனை படைத்தார் ருமேஷ்!
Local
13 September 2026
அங்குலான கடற்பரப்பில் மூழ்கிய கடற்படை படகு சுமார் ஒரு மாதத்தின் பின்னர் மீட்பு!
Local
13 September 2026
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: இலங்கை அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
13 September 2026
டீசல் விலையை உடனடியாக உயர்த்த தனியார் நிறுவனங்கள் அழுத்தம்!
Local
13 September 2026