General13 September 2026

மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி: இலங்கை அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மகளிருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வெர்மா ஆகியோர் அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில், ஷஃபாலி வெர்மா 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 59 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ரன்-அவுட் முறையில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய தலைவி ஹர்மன்பிரீத் கவுர் 14 ஓட்டங்களையும், விக்கெட் காப்பாளர் ரிச்சா கோஷ் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமுதி பிரபோதா, மிதாலி அயோத்யா மற்றும் சமரி அத்தபத்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் வீழ்த்தினர்.

இதன்படி, ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்ற இலங்கை மகளிர் அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes