இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதுடன், பனிப்பாறை ஏரிகள் ஆபத்தான முறையில் விரிவடைந்து வருவதாகப் புதிய ஆய்வொன்று எச்சரித்துள்ளது.
சுற்றாடல் ஆலோசனை நிறுவனமான 'Systemiq', 'ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம்' (ICIMOD) உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இமயமலையின் தற்போதைய சூழல் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது இமயமலைப் பனிப்பாறைகள் 65 சதவீதம் அதிவேகமாக உருகி வருகின்றன.
இமயமலை-காரகோரம் பிராந்தியத்தில் சுமார் 40,000 பனிப்பாறைகள் உள்ள போதிலும், வெறும் 21 பனிப்பாறைகள் மட்டுமே விரிவாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் 18 சதவீத நிலப்பரப்பைக் கொண்டுள்ள இமயமலைப் பகுதி, நாட்டில் நிகழும் பேரிடர்களில் 35 சதவீதத்திற்குப் பொறுப்பாக அமைகின்றது.
இதில் இந்தியாவில் உள்ள 56 பனிப்பாறை ஏரிகள் "மிகவும் ஆபத்தானவை" என அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இமயமலையின் நீர் ஆதாரமானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 20 சதவீதத்துக்குப் பங்களிக்கிறது.
எனினும், நடப்பு நூற்றாண்டின் நடுப்பகுதியை எட்டும்போது பனிப்பாறைகளின் நீர்வரத்து உச்சத்தை அடைந்து, அதன் பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதற்கு மூன்றில் ஒரு பங்கு 'கரிமக் கார்பன்' (Black carbon) மாசுபாடே முக்கிய காரணமாக அமைகிறது.
செங்கல் சூளைகள் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் இந்த மாசு, பனியின் மீது படிந்து சூரிய வெப்பத்தை அதிகளவில் ஈர்த்து பனி உருகுவதை விரைவுபடுத்துகிறது.
நேபாளம் மற்றும் திபெத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவங்கள் இந்த அபாயத்தை உணர்த்துகின்றன.
எனவே, எல்லை கடந்த பனிப்பாறை கண்காணிப்பு, இயற்கை பேரழிவு எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தெற்காசிய நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுற்றாடல் ஆலோசனை நிறுவனமான 'Systemiq', 'ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம்' (ICIMOD) உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இமயமலையின் தற்போதைய சூழல் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது இமயமலைப் பனிப்பாறைகள் 65 சதவீதம் அதிவேகமாக உருகி வருகின்றன.
இமயமலை-காரகோரம் பிராந்தியத்தில் சுமார் 40,000 பனிப்பாறைகள் உள்ள போதிலும், வெறும் 21 பனிப்பாறைகள் மட்டுமே விரிவாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் 18 சதவீத நிலப்பரப்பைக் கொண்டுள்ள இமயமலைப் பகுதி, நாட்டில் நிகழும் பேரிடர்களில் 35 சதவீதத்திற்குப் பொறுப்பாக அமைகின்றது.
இதில் இந்தியாவில் உள்ள 56 பனிப்பாறை ஏரிகள் "மிகவும் ஆபத்தானவை" என அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இமயமலையின் நீர் ஆதாரமானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 20 சதவீதத்துக்குப் பங்களிக்கிறது.
எனினும், நடப்பு நூற்றாண்டின் நடுப்பகுதியை எட்டும்போது பனிப்பாறைகளின் நீர்வரத்து உச்சத்தை அடைந்து, அதன் பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதற்கு மூன்றில் ஒரு பங்கு 'கரிமக் கார்பன்' (Black carbon) மாசுபாடே முக்கிய காரணமாக அமைகிறது.
செங்கல் சூளைகள் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் இந்த மாசு, பனியின் மீது படிந்து சூரிய வெப்பத்தை அதிகளவில் ஈர்த்து பனி உருகுவதை விரைவுபடுத்துகிறது.
நேபாளம் மற்றும் திபெத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவங்கள் இந்த அபாயத்தை உணர்த்துகின்றன.
எனவே, எல்லை கடந்த பனிப்பாறை கண்காணிப்பு, இயற்கை பேரழிவு எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தெற்காசிய நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Latest News
இங்கிலாந்து எதிர் இலங்கை: முதல் 20 க்கு 20 போட்டி : நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட முடிவு!
Local
15 September 2026
காவல்துறை சான்றிதழ் இணையத்தள சேவை தற்காலிகமாக முடக்கம்: மாற்று வழி அறிவிப்பு!
Local
15 September 2026
சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஜித்தா தூதரகம் வெளியிட்ட அதிரடி தகவல்!
Local
15 September 2026
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் தலைவருக்கு பிணை
Local
15 September 2026
உணவுப் பட்டியலிலிருந்து மறையும் மாட்டிறைச்சி: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு செய்தி!
Local
15 September 2026
ஒரே வருடத்தில் திருமணம் கைக்கூடும்: 'புனித மருதாணி' பெறக் குவிந்த மக்கள்!
Local
15 September 2026
காவல்துறை தகவலாளரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது
Local
15 September 2026
போக்குவரத்து சமிக்ஞையை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி மீது சட்ட நடவடிக்கை
Local
15 September 2026
IMAX வசூலில் வரலாறு படைத்த ‘The Odyssey’ திரைப்படம்!
Local
15 September 2026
முன்விரோதத்தால் வந்த வினை - கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு
Local
15 September 2026