இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துகளில் சுமார் 30 சதவீதமானவை வீதிகளில் வசிக்கும் நாய்களாலேயே ஏற்படுகின்றன என்றும், நாய் கடியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு விசர்நாய் கடி நோய் தடுப்பூசி வழங்குவதற்காக ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் விலங்கு தொகையை மனிதநேயத்துடன் முகாமைத்துவம் செய்வதற்கான கால்நடை மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த அமைப்பின் நிறுவுனர் மருத்துவர் சமித் நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
வேகமாக அதிகரித்து வரும் வீதிகளில் வசிக்கும் நாய்களின் எண்ணிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், பொதுமக்களின் வரிப்பணமே தடுப்பூசிகளுக்காக இவ்வாறு விரயமாகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீதிகளில் நாய்கள் பெருகியதற்கு மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தைகளும், சமூகப் பொறுப்புக்கூறல் பற்றிய விழிப்புணர்வின்மையுமே பிரதான காரணங்களாகும்.
அத்துடன் முறையற்ற கழிவு முகாமைத்துவமும் தெருநாய்களுக்கு இலகுவாக உணவு கிடைக்க வழிவகுத்துள்ளது.
விலங்கு தொகை முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டமூலத்தின் மூலம் இதற்கு நீண்டகால தீர்வை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டமூலத்தின் கீழ், உரிமையாளர்களைக் கொண்ட அனைத்து நாய்களும் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். அதேவேளை, உரிமையாளரோ அல்லது பராமரிப்பாளரோ இல்லாத தெருநாய்களுக்கான பொறுப்பு அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்படும்.
அதன்படி, இவ்வாறான விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை சிகிச்சை செய்வதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இதன்மூலம் வீதிகளில் வசிக்கும் விலங்குகள் பராமரிப்பின்றி கைவிடப்படாது என்றும் மருத்துவர் சமித் நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த அமைப்பின் நிறுவுனர் மருத்துவர் சமித் நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
வேகமாக அதிகரித்து வரும் வீதிகளில் வசிக்கும் நாய்களின் எண்ணிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், பொதுமக்களின் வரிப்பணமே தடுப்பூசிகளுக்காக இவ்வாறு விரயமாகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீதிகளில் நாய்கள் பெருகியதற்கு மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தைகளும், சமூகப் பொறுப்புக்கூறல் பற்றிய விழிப்புணர்வின்மையுமே பிரதான காரணங்களாகும்.
அத்துடன் முறையற்ற கழிவு முகாமைத்துவமும் தெருநாய்களுக்கு இலகுவாக உணவு கிடைக்க வழிவகுத்துள்ளது.
விலங்கு தொகை முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டமூலத்தின் மூலம் இதற்கு நீண்டகால தீர்வை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டமூலத்தின் கீழ், உரிமையாளர்களைக் கொண்ட அனைத்து நாய்களும் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். அதேவேளை, உரிமையாளரோ அல்லது பராமரிப்பாளரோ இல்லாத தெருநாய்களுக்கான பொறுப்பு அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்படும்.
அதன்படி, இவ்வாறான விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை சிகிச்சை செய்வதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இதன்மூலம் வீதிகளில் வசிக்கும் விலங்குகள் பராமரிப்பின்றி கைவிடப்படாது என்றும் மருத்துவர் சமித் நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!
Local
19 September 2026
போரை நிறுத்துவதற்காக, ரஷ்யா மீது விரிவான பொருளாதாரத் தடைச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து!
Local
19 September 2026
99ஆவது ஒஸ்கார் போட்டிக்கான இந்தியத் தேர்வாக இளையராஜாவின் ‘கோந்தல்’ திரைப்படம்!
Local
19 September 2026
திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது!
Local
19 September 2026
7 மணி நேர விசாரணைக்குப் பின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Local
19 September 2026
நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்!
Local
19 September 2026
போதைப்பொருள் பயன்படுத்திய 11 வயது சிறுவன்: சமூக வலைதளக் காணொளியால் பரபரப்பு - காவல்துறையினரின் உடனடி நடவடிக்கை!
Local
19 September 2026
வருமான வரி வழக்கு: மாட்டிக்கொண்டார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா!
Local
19 September 2026
அனோஜன் விவகாரம்: சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்க ரிஷாத் முயற்சி; அலி சப்ரி, கலீலுர் ரஹ்மான் வலியுறுத்து!
Local
19 September 2026
மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி!
Local
19 September 2026