இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துகளில் சுமார் 30 சதவீதமானவை வீதிகளில் வசிக்கும் நாய்களாலேயே ஏற்படுகின்றன என்றும், நாய் கடியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு விசர்நாய் கடி நோய் தடுப்பூசி வழங்குவதற்காக ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் விலங்கு தொகையை மனிதநேயத்துடன் முகாமைத்துவம் செய்வதற்கான கால்நடை மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த அமைப்பின் நிறுவுனர் மருத்துவர் சமித் நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
வேகமாக அதிகரித்து வரும் வீதிகளில் வசிக்கும் நாய்களின் எண்ணிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், பொதுமக்களின் வரிப்பணமே தடுப்பூசிகளுக்காக இவ்வாறு விரயமாகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீதிகளில் நாய்கள் பெருகியதற்கு மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தைகளும், சமூகப் பொறுப்புக்கூறல் பற்றிய விழிப்புணர்வின்மையுமே பிரதான காரணங்களாகும்.
அத்துடன் முறையற்ற கழிவு முகாமைத்துவமும் தெருநாய்களுக்கு இலகுவாக உணவு கிடைக்க வழிவகுத்துள்ளது.
விலங்கு தொகை முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டமூலத்தின் மூலம் இதற்கு நீண்டகால தீர்வை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டமூலத்தின் கீழ், உரிமையாளர்களைக் கொண்ட அனைத்து நாய்களும் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். அதேவேளை, உரிமையாளரோ அல்லது பராமரிப்பாளரோ இல்லாத தெருநாய்களுக்கான பொறுப்பு அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்படும்.
அதன்படி, இவ்வாறான விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை சிகிச்சை செய்வதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இதன்மூலம் வீதிகளில் வசிக்கும் விலங்குகள் பராமரிப்பின்றி கைவிடப்படாது என்றும் மருத்துவர் சமித் நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த அமைப்பின் நிறுவுனர் மருத்துவர் சமித் நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
வேகமாக அதிகரித்து வரும் வீதிகளில் வசிக்கும் நாய்களின் எண்ணிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், பொதுமக்களின் வரிப்பணமே தடுப்பூசிகளுக்காக இவ்வாறு விரயமாகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீதிகளில் நாய்கள் பெருகியதற்கு மனிதர்களின் பொறுப்பற்ற நடத்தைகளும், சமூகப் பொறுப்புக்கூறல் பற்றிய விழிப்புணர்வின்மையுமே பிரதான காரணங்களாகும்.
அத்துடன் முறையற்ற கழிவு முகாமைத்துவமும் தெருநாய்களுக்கு இலகுவாக உணவு கிடைக்க வழிவகுத்துள்ளது.
விலங்கு தொகை முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டமூலத்தின் மூலம் இதற்கு நீண்டகால தீர்வை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டமூலத்தின் கீழ், உரிமையாளர்களைக் கொண்ட அனைத்து நாய்களும் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். அதேவேளை, உரிமையாளரோ அல்லது பராமரிப்பாளரோ இல்லாத தெருநாய்களுக்கான பொறுப்பு அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்படும்.
அதன்படி, இவ்வாறான விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை சிகிச்சை செய்வதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இதன்மூலம் வீதிகளில் வசிக்கும் விலங்குகள் பராமரிப்பின்றி கைவிடப்படாது என்றும் மருத்துவர் சமித் நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
"அப்பா முதலமைச்சர்... விளம்பரத்தில் அரசியல் வேண்டாம்" – மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
17 September 2026
காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்களில் சிக்கலா? : தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!
Local
17 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!
Local
17 September 2026
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் தொடருந்து சேவைகள்!
Local
17 September 2026
ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
Local
17 September 2026
இலங்கைக்கு உதவுவது குடும்ப உறுப்பினருக்கு உதவுவது போன்றது:இந்தியா உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
Local
17 September 2026
நிதியியல் வியாபாரச் சட்டத்தை மீறிய தம்புள்ளை நபர்: மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ எச்சரிக்கை!
Local
17 September 2026
இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது!
Local
17 September 2026
கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை: செப்டம்பர் இறுதியில் 7 புதிய வழித்தடங்கள் அறிமுகம்!
Local
17 September 2026
புதிய அமெரிக்க தூதுவர்: பிரதி பாதுகாப்பு அமைச்சரை முதன்முதலாக சந்தித்தார்!
Local
17 September 2026