சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பணியாற்றும் அரச துறை பதவிகளுக்கான சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்மொழிவு அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள முறைமைக்கு அமைய, சிறுவர்களுடன் நேரடியாகப் பணியாற்றும் அரச பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்படுபவர்கள், நியமனத்திற்கு முன்னர் காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து சான்றிதழொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன், ஏற்கனவே இவ்வாறான பதவிகளில் பணியாற்றும் அரச அதிகாரிகளும் தமது சேவைக் காலத்தின் குறிப்பிட்ட கட்டங்களிலும், வேதன உயர்வு பெறும் சந்தர்ப்பங்களிலும் குறித்த சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது அவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஜித்தா தூதரகம் வெளியிட்ட அதிரடி தகவல்!
Local
15 September 2026
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் தலைவருக்கு பிணை
Local
15 September 2026
உணவுப் பட்டியலிலிருந்து மறையும் மாட்டிறைச்சி: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு செய்தி!
Local
15 September 2026
ஒரே வருடத்தில் திருமணம் கைக்கூடும்: 'புனித மருதாணி' பெறக் குவிந்த மக்கள்!
Local
15 September 2026
காவல்துறை தகவலாளரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது
Local
15 September 2026
போக்குவரத்து சமிக்ஞையை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி மீது சட்ட நடவடிக்கை
Local
15 September 2026
IMAX வசூலில் வரலாறு படைத்த ‘The Odyssey’ திரைப்படம்!
Local
15 September 2026
முன்விரோதத்தால் வந்த வினை - கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு
Local
15 September 2026
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் தங்கம், வெள்ளி படிவங்கள் கண்டுபிடிப்பு!
Local
15 September 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
15 September 2026