சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பணியாற்றும் அரச துறை பதவிகளுக்கான சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்மொழிவு அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள முறைமைக்கு அமைய, சிறுவர்களுடன் நேரடியாகப் பணியாற்றும் அரச பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்படுபவர்கள், நியமனத்திற்கு முன்னர் காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து சான்றிதழொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன், ஏற்கனவே இவ்வாறான பதவிகளில் பணியாற்றும் அரச அதிகாரிகளும் தமது சேவைக் காலத்தின் குறிப்பிட்ட கட்டங்களிலும், வேதன உயர்வு பெறும் சந்தர்ப்பங்களிலும் குறித்த சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது அவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
முதல் இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
Local
16 September 2026
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை
Local
16 September 2026
தபால் வாக்களிப்பு கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
16 September 2026
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருபதுக்கு 20 தொடரை வென்றது இந்தியா: டெல்லி போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி!
Local
16 September 2026
நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை: த.வெ.க வினருக்குக் கடும் கண்டனம்!
Local
16 September 2026
விண்வெளியில் புதிய ஆயுதம்: அமெரிக்காவின் அறிவிப்பால் பதற்றம்!
Local
16 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை : சவுத்தம்டனில் இங்கிலாந்து அதிரடி
Local
16 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை: முதல் 20 க்கு 20 போட்டி : நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட முடிவு!
Local
15 September 2026
காவல்துறை சான்றிதழ் இணையத்தள சேவை தற்காலிகமாக முடக்கம்: மாற்று வழி அறிவிப்பு!
Local
15 September 2026
சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஜித்தா தூதரகம் வெளியிட்ட அதிரடி தகவல்!
Local
15 September 2026