General16 September 2026

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிப் பணத்தைச் செலுத்துவதற்கான கடைசித் திகதி 2026 செப்டம்பர் 30 என வரி செலுத்துவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.

அபராதங்கள் மற்றும் வட்டி விதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது வரிகளை செப்டம்பர் 30-க்கு முன்னதாக அல்லது அன்றைய தினத்திற்குள் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் பங்கான்மை வருமான வரி ஆகியவற்றுக்குப் பொருந்தும்.
வரிகளை IRD இன் இணையவழி வரி செலுத்தும் தளம் (Online Tax Payment Platform) மூலமாகச் செலுத்தலாம்.

அத்துடன், நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் பங்கான்மை வருமான வரிகளை இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும்.

வரிகளைச் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும் என்றும், தாமதமாகச் செலுத்துவதற்காக விதிக்கப்படும் வட்டியைத் தள்ளுபடி செய்யவோ குறைக்கவோ முடியாது என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில், உதவி தேவைப்படும் வரி செலுத்துவோர் 1944 என்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes