General16 September 2026

கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் 30-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே, ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes